• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பதின்ம வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற இளைஞர் நையப்புடைப்பு

இலங்கை

திருகோணமலை - கிண்ணியா சூரங்கள் பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய மாணவி ஒருவரை நெடுத்தீவு பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் காதலித்து, திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்றபோது சிறுமியின் பெற்றோர்கள் இளைஞனை தாக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞர் சிறுமியை குருநாகல் பகுதிக்கு அழைத்துச் சென்ற போது அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ,  இருவரையும்  விசாரணை செய்தபோது சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனை அடுத்து சிறுமியின் உறவினர்களுக்கு தெரியப்படுத்திய நிலையில்  உறவினர்கள்  இளைஞனை தாக்கியதாகவும் தெரிய வருகின்றது.

அத்துடன்  பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து இளைஞரை கைது செய்து சட்ட வைத்திய அதிகாரியிடம் சோதனைக்காக கொண்டு சென்ற போது இளைஞருக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில்  இளைஞரை வைத்தியசாலையிலும்,   சிறுமியை சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இளைஞரை கைது செய்து பொலிஸ் கண்காணிப்பில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
 

Leave a Reply