• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மெஸ்சி வந்ததால் எங்கள் வீட்டின் மதிப்பு 200 கோடியாக உயர்ந்துவிட்டது - அமெரிக்க தொழிலதிபர் நெகிழ்ச்சி 

அர்ஜென்டினாவின் கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்சி (Lionel Messi), அமெரிக்க கிளப் அணியான இன்டர் மியாமியில் இணைந்து விளையாடி வருகிறார். இதனால் அவர் புளோரிடா மாகாணத்தில் அவர் குடியேறுகிறார். இதன்மூலம் அவரது அண்டை வீட்டார் பணம் ஈட்டத் தொடங்கியுள்ளனர்.
  
அதாவது, Fort Lauderdale-வில் 8.4 மில்லியன் பவுண்ட்கள் மதிப்பிலான சொத்தினை மெஸ்சி வாங்கினார். இத்துடன் அவர் அங்குள்ள பணக்காரர்களுடன் இணைந்தார்.

அவர்களில் ஒருவர் Patrick Bet-David. இவர் தங்களுக்கு அருகில் மெஸ்சி குடியேறியதால் தங்களின் வீட்டின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றில் இதுகுறித்து அவர் கூறுகையில், 'இதுவரை, இன்றைய காலநிலையின்படி, நான் ஏற்கனவே எனக்கு சொந்தமான வீட்டில் 25 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் 208 கோடி) Equity செய்துள்ளேன். மெஸ்சி இப்போதுதான் என் வீட்டிற்குப் பக்கத்தில் குடிபெயர்ந்தார். எல்லோரும் எங்கள் சமூகத்தில் இருக்க விரும்புகிறார்கள். இது ஒரு தீவில் உள்ள நுழைவாயில் சமூகம், மிகவும் பாதுகாப்பான ஒரே ஒரு வழி உள்ளது.

கடவுள் விரும்பினால் அது இன்னும் உள்ளது. இப்போது மெஸ்சி அங்கு இருப்பதால் அனைவரும் தங்கள் படகில் வீடுகளைப் பார்க்க வருகிறார்கள். நாங்கள் நன்றாக இருக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.

மெஸ்சியின் சொகுசு வீட்டில் 10 படுக்கையறைகள், நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி மாற்று Spa அறை உள்ளன. 
 

Leave a Reply