கண் பார்வையை இழந்த சிறுமியுடன் தேனீர் அருந்தும் ராணி கமிலா
பிரித்தானியாவின் ராணியான கமிலா, ஒலிவியா டெய்லர் என்ற 7 வயதுச் சிறுமியுடன் தேநீர் அருந்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அண்மையில் வின்ட்சர் கோட்டையில் (Windsor Castle) ராணி இவ்வாறு சிறுமி ஒருவருடன் தேனீர் அருந்தியுள்ளனர்.
மூளைக் கட்டியினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குறித்த சிறுமி, தற்போது தனது கண் பார்வையையும் இழந்துள்ளார்.
இந்த நிலையில், தன் வாழ்நாளில் பெரும்பகுதியை கீமோதெரபியில் செலவழித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.