• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2,000 கிலோ வெங்காயம் கொண்டு பாரிய கிறிஸ்துமஸ் தாத்தா சிற்பம்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தா உருவ மணற்சிற்பம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக் பிரபல மணற்சிற்ப கலைஞராவார்.

ஒவ்வொரு முக்கிய நிகழ்வின்போதும் ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணற்சிற்பம் அமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், டிசம்பர் 25 அன்று, கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பூரி கடற்கரையில் 2,000 கிலோ வெங்காயம் மற்றும் மணலைக் கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா மணற்சிற்பத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

இது, பார்வையாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் தாத்தா உருவம்

இதுகுறித்து சுதர்சன் பட்நாயக் கூறுகையில்,

“ஒவ்வொரு ஆண்டும், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பூரி கடற்கரையில் சில வித்தியாசமான சிற்பங்களை உருவாக்குகிறோம்.

அந்த வகையில் இந்த ஆண்டு, 2,000 கிலோ வெங்காயம் மற்றும் மணலைக் கொண்டு, 100 அடி நீளம், 20 அடி உயரம் மற்றும் 40 அடி அகலம் கொண்ட உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை உருவாக்கியுள்ளோம்.

மேலும், ‘மரக்கன்றை பரிசளிப்பீர்; பூமியை பசுமையாக்குவீர்' என்ற செய்தியை இதன் மூலம் உலகக்கு உணர்த்துகிறோம்” என்றார்.

Leave a Reply