• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரேசிலில் கணவனின் பிறப்புறுப்பை வெட்டி கழிவறையில் கரைத்த மனைவி

பிரேசிலில் பெண்ணொருவர் தனது கணவரின் பிறப்புறுப்பை துண்டித்து கழிவறையில் கரைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேசில் நாட்டில் 34 வயது பெண்ணொருவர் சாவ் பாலோவின் Atibaia-யில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று ஒரு விடயத்தை கூறியுள்ளார்.
  
அதனைக் கேட்ட காவல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். குறித்த பெண், 'மாலை வணக்கம் ஆஃபிசர், நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வந்திருக்கிறேன், ஏனெனில் என் கணவரின் பிறப்புறுப்பை நான் துண்டித்து விட்டேன்' என்று கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் 39 வயது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை சரியாக இல்லை என்று கூறப்படுகிறது.

தனது மருமகள் (Niece) முறையான 15 வயது சிறுமியுடன் தன் கணவர் படுக்கையில் ஒன்றாக இருந்ததை கண்டுபிடித்த பின்னர் அப்பெண், அவரை தன்னுடன் உறங்க வருமாறு அழைத்துள்ளார்.

கணவர் படுக்கைக்கு வந்ததும் அவரது கை, கால்களை கட்டிலில் கட்டிவிட்டு, ஒரு Razor-ஐ எடுத்து பிறப்புறுப்பை வெட்டியுள்ளார்.

அதன் பின்னர் அதனை புகைப்படம் எடுத்த அவர், மீண்டும் அதனை இணைக்க சாத்தியம் உள்ளது என்பதை அறிந்ததும், உடனடியாக கழிவறையில் Flush செய்துள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, பொலிஸார் அவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், பிரேசிலில் 14 வயதுடைய சிறுமியுடன் சம்மதத்தின் பேரில் உறவு கொள்ளலாம் என்பதால், அதன் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர். 
 

Leave a Reply