• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்

இலங்கை

முல்லைதீவு மாவட்டத்தில் கடந்த 2004 மார்கழி 26 அன்று இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் விதமாக  கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழக மைதானத்தில்  விசேட நினைவேந்தல் நிகழ்வொன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது சுனாமி பேரலையில் தனது உறவுகளை தொலைத்த மக்கள் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 

Leave a Reply