• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னாரில் பேருந்து மோதியதில் 8 மாடுகள் உயிரிழப்பு

இலங்கை

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதிக்கு உட்பட்ட நாயாத்து வழி பகுதியில், நேற்று மாலை தனியார் பேருந்தொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்ற மாடுகள் மீது மோதியதில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன.

மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாடுகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், இதன்போது மேலும் பல மாடுகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply