• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாதுகாப்பு நடவடிக்கை மீண்டும் அமுல்படுத்தப்படும்-சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா

இலங்கை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த நடவடிக்கை நிறுத்தப்படவில்லை எனவும் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் நடவடிக்கையின் காரணமாக சிலர் தங்களுடைய இருப்பிடத்தை மாற்றி ஆட்கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும்இ இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply