• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரான்ஸில் இருந்து 14 இலங்கையர்கள் நாடு கடத்தல்

பிரான்ஸில் 14 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தள்ளனர். சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் சென்ற நிலையில், அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
  
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் படகு மூலம் பிரான்ஸின் ரீயூனியன் தீவிற்கு சென்ற 7 இலங்கையர்கள் உட்பட 14 பேர் இவ்வாறு இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

21 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களே நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
 

Leave a Reply