• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவில் குத்தி கொல்லப்பட்ட இளம் பெண் - சிக்கிய 16 வயது சிறுவன் 

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் ஈவ் தினத்தன்று 22 வயது இளம் பெண் கொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கிறிஸ்துமஸ் ஈவ்வில் தெற்கு லண்டன் பகுதியில் 22 வயது இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு 10.03 மணியளவில் பெர்மாண்ட்சேயின் (Bermondsey) ஸ்பென்லோ ஹவுஸில் (Spenlow House) உள்ள குடியிருப்பு பகுதியில் 22 வயது இளம் பெண் கத்தியால் குத்தப்பட்டு இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இளம் பெண்னை கண்டுபிடித்து முதலுதவி சிகிச்சை வழங்கினர். ஆனால் பெண் சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாலை கொலை நடந்த இடத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான 16 வயது டீன் ஏஜ் சிறுவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவரும், சந்தேக நபரும் ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில் இளம் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்து இருப்பதுடன், சந்தேக நபரை தெற்கு லண்டன் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக வைத்துள்ளனர். 
 

Leave a Reply