• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொது மன்னிப்பில் விடுதலை - கைதிகளின் விபரங்கள்

இலங்கை

நத்தார் தினத்தை முன்னிட்டு 1004 கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பெறுவதற்குத் தகுதி பெற்ற கைதிகளில் 989 ஆண் கைதிகளும் 15 பெண் கைதிகளும் உள்ளடங்குகின்றனர்.

இதில் பல்லேகல திறந்த சிறைச்சாலையில் 162 கைதிகளும், அனுராதபுரம் சிறைச்சாலையில் 78 கைதிகளும், மட்டக்களப்பு சிறையில் இருந்து 46 கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலையில் 42 கைதிகளும் அடங்குகின்றனர்.

மேலும் யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகளும் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 23 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பைப் பெறுவதற்கு தகுதியுடைய 1,004 கைதிகளும் சிறைகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.
 

Leave a Reply