• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெள்ளத்தினால் முல்லைத்தீவில் 4806 பேர் பாதிப்பு

இலங்கை

சீரற்ற காலநிலையினால் முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு  காரணமாக 1586 குடும்பங்களைச் சேர்ந்த 4806 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலக அதிகாரிகள்,  இராணுவத்தினர், பொதுமக்கள்  உள்ளிட்டோர் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரணைமடு, முத்தையன்கட்டு மற்றும் தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதால் அப்பகுதியில் வாழும் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply