• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாலி படத்தில் இருந்து முதலில் விலகிய ஜோதிகா.. 

சினிமா

அஜித்தின் வாலி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் சிம்ரன் நடித்திருந்த ரோலில் முதலில் ஜோதிகா தான் நடிக்க இருந்தாராம்.

அப்போது ஜோதிகாவுக்கு அது தான் முதல் படம். ஆனால் ஹிந்தி படத்திற்காக டேட் பிரச்சனை வந்ததால் வாலி படத்தில் இருந்து ஜோதிகா வெளியேறிவிட்டாராம்.

அதன் பின் தான் சிம்ரனை அணுகி ஒப்பந்தம் செய்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா.

மீண்டும் இணைந்தது ஏன்?

அதன் பிறகு மீண்டும் ஜோதிகாவை அணுகிய எஸ்ஜே சூர்யா 'ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க முடியுமா' என கேட்டிருக்கிறார். அதற்கு உடனே ஓகே சொல்லி ஜோதிகா நடித்து கொடுத்தாராம்.

முதலில் படத்தில் இருந்து விலகியது தப்புதான், அதற்க்கு பதிலாக இதை செய்கிறேன் என சொல்லி ஜோதிகா நடித்துள்ளார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply