• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெள்ளத்தில் தத்தளிக்கும் திருகோணமலை

இலங்கை

திருகோணமலை மாவட்டத்தில்  இன்று காலையிலிருந்து பெய்துவரும் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக திருகோணமலை நகரின் மட்கோ, பள்ளத்தோட்டம், உப்புவெளி, 3ம் கட்டை,அலஸ்தோட்டம், துவரங்காடு, கன்னியா ஆகிய பகுதிகள் வெள்ள நீரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருகோணாமலை – கண்டி பிரதான வீதியிலும் வெள்ள நீர் சடுதியாக அதிகரித்துள்ளதால் அவ் வீதியினூடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply