• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கல்முனை சாஹிராவில் 9ஏ சித்தி பெற்ற மாணவர்களுக்கு கௌரவம்

இலங்கை

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில், இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில், 9ஏ சித்திகளைப் பெற்றுக் கொண்ட 23 மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (04) நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் எம்.ஐ. ஜாபீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவர்  எம்.எஸ்.எம். முபாறக் , பழைய மாணவ சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.
 

Leave a Reply