• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பூனை உலகிலேயே மிகவும் ஆக்ரோஷமான விலங்கு

இலங்கை

உலகிலேயே மிகவும் ஆக்ரோஷமான விலங்காக பூனை மாறியுள்ளதாகவும், பூனையினால் சுற்றுச்சூழல் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் சேதம் ஏற்படுவதாகவும் சுற்றுச்சூழல் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் அமைச்சின் பல்லுயிர்ப் பிரிவினால் நேற்று (05) நடைபெற்ற இலங்கையில் உள்ள ஆக்கிரமிப்பு வேற்றுக்கிரக உயிரினங்கள் குறித்து சுற்றாடல் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பூனைகளின் இனப்பெருக்கம் வேகமாக அதிகரித்து வருவதாகவும், வீட்டில் பூனைகள் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்டாலும், பூனை அடக்கமான விலங்கு அல்ல என்றும், கூறினார்.

நியூசிலாந்துக்கு அண்மித்த செயின்ட் ஸ்டீபன் தீவில் மட்டும் வாழ்ந்த பறவை இனத்தை ஒரு வருடத்திற்குள் பூனைகள் முற்றாக அழித்துள்ளதாக சுற்றாடல் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply