• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் விவாதம்

இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேணை ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சபை ஒத்திவைப்பு பிரேணை கொண்டு வரப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பிரேரணையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் 1979இல் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் பாகத்தில் அவசரகாலச் சட்ட ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்டதுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் காரணமின்றி தடுத்து வைத்து, சித்திரவதையின் மூலம் பொய்யான வாக்குமூலங்களைப் பெறுவதற்குப் பயன்படுத்தினார்கள்.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டில், பயங்கரவாத தடைச்சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் என்று நாடு தழுவிய கையெழுத்து பிரசாரமொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் நானும். முன்னெடுத்தோம்

அதேபோன்று சர்வதேச சமூகத்திலும் இந்த சட்டத்தினை இரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தின. எனினும் இலங்கை அரசாங்கம் அந்தச் செயற்டபாட்டை முன்னெடுப்பதற்கு தவறிஞயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply