அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்று ஆயிஷா பாலிகா தேசிய பாடசாலை சாதனை
தற்போது வெளியாகிய புலமை பரீட்சை முடிவுகளில் அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் Mohamed Anas Farhath Fathima 190 புள்ளிகளை பெற்று அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமான பரீட்சையில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் நம் பிறதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் அடடாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்திய அதிகாரியும் அக்கரைப்பற்று அந் நூர் சமூக கலாசார நிறுவனத்தின் முன்னாள் தலைவருமாகிய Mohamed Abeebullah Anas
மற்றும் அக்கரைப்பற்று ஆயிஷா மகளிர் தேசிய பாடசாலையில் உயர் தர விஞ்ஞான பிரிவில் ஆசிரியராக கடமை புரியும் Uthumalebbe Zinis ஆகியோர்களின் மூன்றாவது புதல்வியுமாவார்.
அந் நூர் முன்பள்ளி பாடசாலையில் கல்வி பயணத்தை ஆரம்பித்த இம்மாணவி தொடர்ந்தும் அந் நூர் மாலை நேர மதரசாவில் அல் குர்ஆன் கற்கை நெறியினை பூர்த்தி செய்து பின்னர் அட்டாளைச்சேனை அஷ்பால் வின்னர்ஸ் அகடமியின் மனன பிரிவில் சேர்ந்து இதுவரைக்கும் 8 ஜூசூக்களையும் மனனம் செய்துள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ்.
இம்மாணவியின் கல்வி பயணத்தில் உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.