• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் குறிவைக்கப்படும் உணவகங்கள்

இலங்கை

யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட காங்கேசன்துறை வீதி, மற்றும் இராமநாதன் வீதி ஆகிய பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் நேற்று(17)  திடீர் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன் போது மூன்று உணவகங்கள் மற்றும் ஒரு வெதுப்பகம் என்பவை சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்துள்ளமை அம்பலமாகியுள்ளது. குறித்த உணவு கையாளும் நிலையங்களுக்கு ஏற்கனவே சில சுகாதார சீர்கேடுகளை சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் அவற்றை நிவர்த்தி செய்யாததால் , அவற்றுக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது  குறித்த உணவகங்களுக்கு  சீல் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம்,வழக்கினை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்துள்ளது.
 

Leave a Reply