• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு அமைச்சரவை உபகுழுவின் கோரிக்கை

இலங்கை

இலங்கை கிரிக்கட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இன்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உபகுழுவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நியமித்தார்.

அமைச்சர்களான டிரான் அலஸ், மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா கிரிக்கட் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் கட்சி, எதிர்கட்சி பேதங்களை புறந்தள்ள வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 

Leave a Reply