• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பில் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கைது

இலங்கை

மட்டக்களப்பில் கால்நடைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் துப்பாக்கிகளுடன் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாதவனை, மயிலத்தமடு பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இரு சட்டவிரோத குடியேற்றவாசிகளே இவ்வாறு வாழைச்சேனை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மேச்சல்தரை பகுதியில் தொடர்ச்சியாக பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply