• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிப்பு

இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 14 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 12 தமிழக மீனவர்கள் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டதுடன், 28 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 2 படகுகளுடன் மேலும் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த 26 மீனவர்களில் 04 பேர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 08 ஆம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏனைய 22 இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அவர்களில் ஒருவர் 2022 ஆம் ஆண்டு எல்லை தாண்டி மீன் பிடித்தமைக்காக கைது செய்யப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தமை தெரியவந்ததுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக் காலத்தில் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்ததால், அவரை சிறையிலடைக்குமாறு நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தவிட்டார்.
 

Leave a Reply