• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் வீதியில் மணலைக் கொட்டிச் சென்ற கடத்தல்காரர்கள்

இலங்கை

டிப்பரில் மணலை கடத்தியவர்கள் பொலிஸாரைக்  கண்டு  தப்பியோடிய போது வீதியில் மணலைக் கொட்டி விட்டுச் சென்ற சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியிலேயே இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் மணல் கடத்தல் காரர்களின் செயலால் வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வீதியில் கொட்டப்பட்ட மணலை வீதிக்கு அருகில் வசிக்கும் சில வீட்டார்  தமது வீடுகளுக்கு எடுத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply