• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைநிறுத்தம் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

இலங்கை

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம் மற்றும் இடைக்கால நிர்வாக குழு நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையிலான ஏழு பேர் கொண்ட இடைக்கால நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தொடர்பிலான விசேட கணக்காய்வு அறிக்கையின் மூலம் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகத்தின் ஊழல்கள், முறைகேடுகள், மற்றும் கடமைகள் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியமை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதால் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி, புதிய இடைக்கால நிர்வாகக் குழுவை நியமித்துள்ளதாக குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply