• Welcome to TamilsGuide
செய்திகள் 1

11 இலங்கையர்கள் ரஃபா எல்லை வழியாக வெளியேற்றம்

இலங்கை

காஸாவிலிருந்து 11 இலங்கையர்கள் ரஃபா எல்லை வழியாக வெளியேறி தற்போது எகிப்தில் தங்கியுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டினர் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறுவதற்காக ரஃபா எல்லையின் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து திறக்கப்பட்டதை அடுத்து அவர்கள் நேற்று காஸாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஆரம்பத்தில் 17 இலங்கையர்கள் காஸாவை விட்டு வெளியேற அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்தனர்.

எவ்வாறாயினும், 11 இலங்கையர்கள் மாத்திரமே ரஃபா எல்லையைப் பயன்படுத்தி எகிப்துக்குள் செல்ல முடிந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 

Leave a Reply