• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடலட்டை பண்ணைகளை பூகோள அரசியலுடன் தொடர்புபடுத்துவது அடிப்படையற்றது

இலங்கை

எமது பிரதேசத்திலுள்ள வளங்களை எமது மக்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடலட்டை குஞ்சு விற்பனை நிலையமொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எமது மக்களினால் அமைக்கப்படுள்ள கடலட்டை பண்ணைகளை பூகோள அரசியலுடன் தொடர்புபடுத்துவது அடிப்படை அற்ற விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடலட்டை பண்ணை விடயத்தில் நாம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் ஆனால், மக்கள் பொருளாதார ரீதியில் வலுவடைவதை விரும்பாத அரசியல்வாதிகள் சிலரும், கடற்றொழிலாளர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்ற சிலரும், கடலட்டைப் பண்ணை தொடர்பாக தவறான கருத்துக்களை வெளியிட்டு வருவது கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
 

Leave a Reply