• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிராம உத்தியோகத்தர் பதவி - 3000 பேருக்கு வாய்ப்பு

இலங்கை

கிராம உத்தியோகத்தர் பதவிக்கு சுமார் 3000 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற  “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய நிகழ்ச்சித் திட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசம்பர் மாதம், முதல் வாரத்தில் நடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும்.

சுமார் 3000 கிராம அலுவலர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சட்டரீதியாக அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.

கிராம உத்தியோகத்தர்களின் வெற்றிடங்கள் உள்ள தொலைதூர பிரதேசங்களில் விசேட தகைமையின் அடிப்படையில் பரீட்சையை நடாத்திய பின்னர் வெற்றிடங்கள் நிரப்பப்படும்” இவ்வாறு பிரதமர்  தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply