• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீண்டும் நடிக்க வரும் ரம்பா - ரீஎன்ட்ரியால் குஷியில் ரசிகர்கள் 

சினிமா

நடிகை ரம்பா ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்ட நிலையில் தற்போது குடும்பம் மற்றும் குழந்தைகளை மட்டுமே கவனித்து வருகிறார்.

ரம்பா மீண்டும் சினிமாவுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில், தற்போது அதை ஒரே அறிவித்து இருக்கிறார்.

"திருமணத்திற்கு பிறகு கூட எல்லோரும் கேட்டார்கள் என டிவிக்களில் ஷோ செய்தேன், ஆனால் குழந்தைகள் என்னை மிஸ் செய்கிறார்கள் எனத் தெரிந்த போது, நடிப்பதை நிறுத்தி விட்டேன்."

"இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன் என அழகான குடும்பம், ஒரு நடிகையாக நான் உணர்ந்ததே இல்லை, ஒரு நல்ல அம்மாவாக மனைவியாகவே இருந்தேன், இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள்."

"இப்போதும் ரசிகர்கள் என்னை ஞாபகாமாக கேட்பதும் பாராட்டுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் அன்புதான் மீண்டும் நடிக்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டியது" என ரம்பா கூறி இருக்கிறார்.

அதனால் ரம்பாவை விரைவில் மீண்டும் திரையில் பார்க்கலாம். 
 

Leave a Reply