• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் நால்வர் காயம்

இலங்கை

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியின் கொஸ்கம – மிரிஸ்வத்த பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கொள்ளுப்பிட்டி பகுதியில்  பேருந்தொன்றின் மீது, மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தோடு 17 பேர் காயமடைந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply