• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மின்சார சபை! நாளை கொழும்பில் பாரிய போராட்டம்

இலங்கை

நாளை(01) அனைத்து மின்சார சபை ஊழியர்களையும் கொழும்புக்கு வரவழைத்து, போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் மின்சார சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார சபையை விற்பனை செய்ய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,  சில கோரிக்கைகளை முன்வைத்துமே  இப்போராட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நாளை நடைபவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply