• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வட மாகாண பூப்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பம்

இலங்கை

வடமாகாண மக்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று  ஆரம்பமான வட மாகாண பூப்பந்தாட்ட போட்டிகள் இன்று முதல்  5 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள உள்ளக அரங்கில் ஆரம்பமான குறித்த ஆரம்ப நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

இதேவேளை கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்கள் எனப்  பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது வருகை தந்த அதிதிகளுக்கு நினைவுப் பரிசில்கள்  வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply