• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில். இறைவழிபாட்டில் ஈடுபட்ட பெண் இறையடி சேர்ந்தார்

இலங்கை

டிப்பர் வாகனமொன்று மோதியதில், ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வயது முதிர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில், நேற்றைய தினம் பொங்கல் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தனபாலசிங்கம் மகேஸ்வரி என்ற 72 வயதான பெண் பொங்கல் நடவடிக்கையில்  ஈடுபட்டிருந்தார்.

இதன்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனமொன்று அப்பெண்மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இவ்விபத்து தொடர்பில், 30 வயதான டிப்பர் சாரதியை கைது செய்துள்ள கோப்பாய் பொலிஸார் இது குறித்த  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply