• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில்.தொலைபேசியில் உரையாடிய பெண் உயிரிழப்பு

இலங்கை

யாழில் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த வயது முதிர்ந்த பெண்ணொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – பொலிகண்டி தெற்கைச் சேர்ந்த ஜெயேந்திரன் சோதிமலர் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்று முன்தினம் இரவு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையிலேயே  திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உடற்கூற்றுப் பரிசோதனையில் அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாகவே உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply