• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விபத்துக்களை ஏற்படுத்தும் வீதிக் குறியீடுகள்

இலங்கை

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் நகர் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வீதிக் குறியீடுகள் சீரற்று காணப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் முதல் பூநகரி, சங்குப்பிட்டி பாலம் வரையிலும், பரந்தன் முதல் முல்லைத்தீவு வரையிலும் உள்ள ‘வீதி வளைவுகள், பாதசாரி கடவை, பெயர் பலகைகள் ‘ உள்ளிட்ட முக்கிய வீதி குறியீடுகள் சேதமடைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் எனவும் குறிப்பாக விபத்துக்கள் சம்பவிப்பதற்கும் இது காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இவ்விடயம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Leave a Reply