நினைத்ததை முடித்தவன்
சினிமா
ஓரியண்டல் பிக்சர்ஸ் தயாரித்த "நினைத்ததை முடித்தவன்" மிகப் பிரம்மாண்டமான தலைவர் இருவேடங்களில் நடித்த வெற்றிப்படம்!
* ரஞ்சித் வேடத்தில் வரும் வில்லன் கேரக்டரில் தூள் படுத்தியிருப்பார்.
* நீண்ட வருடங்கள் (4 வருடம்) தயாரிப்பில் இருந்த படம்.
* தனது இமேஜைப்பற்றி கவலைப்படாமல் சிலகாட்சிகளில் நடித்திருப்பார்.
*இந்திப்படம் 'சச்சா ஜூட்டா'வின் தழுவலே இப்படம்.
* அதில் ராஜேஷ் கண்ணா தன் காலிற்கு ஆப்பரேஷன் செய்த டாக்டரையே கொல்லுவார்.
* தான் கொள்ளையடிப்பதற்கான காரணம் எதையும் சொல்லமாட்டார்.
* சச்சா ஜூட்டா படத்தில் கோர்ட்டில் மோத்தி நாய் வில்லன் ராஜேஷ் கண்ணாவை பார்த்து குரைத்ததும் தான் குற்றவாளி எனஒத்துக் கொள்வார்.
* ஆனால், நினைத்ததை முடிப்பவனில் ரஞ்சித் எம்ஜிஆரோ நாய் குரைப்பதால் எப்படி தான் குற்றவாளி ஆகமுடியும், குற்றவாளி என நிரூபிக்க ஆதாரம் வேண்டாமா? என்று எதிர்க்கேள்வி எழுப்புவார். பின் அவர் தாயார், எம்ஜிஆர் ஒரு திருடன் என தெரிந்ததால் இறந்துவிட்டார் என கோர்ட்டில் அரசு வக்கீலும், போலீசும் நாடகம் நடத்தி அவர் உடலைக் காட்டியவுடன்தான் குற்றவாளி என ஒப்புக்கொள்வார். பின் ஏன் சில வைர வியாபாரிகளிடம் கொள்ளை அடித்தேன் என்று கூறுவார்
*முதலில் ரஞ்சித் எம்ஜிஆருக்கு பிறந்த நாள் கொண்டாடப்படும் பாடல் "நீ தொட்டுப்பேசினால் தங்கமாகுவேன்" என்று மஞ்சுளா மட்டும் பாடி எம்ஜிஆரை வசைபாடும்படி அமைக்கப்பட்டது.
பிறகு எம்ஜிஆரின் ஆலோசனைப்படியே லதா, மஞ்சுளா இருவரும் பாடி ஆடும் "கொள்ளை இட்டவன் நீதான் என மஞ்சுளா பாட "என் உள்ளத்தை" என்று லதா பாட மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் லதாவிற்கு பாடல் என்று தனியே படத்தில் இல்லாததால் மஞ்சுளா, லதா இருவரும் பாடி ஆடும்படி காட்சி அமைக்கப்பட்டது.
Santhanam Admk