பதவி உயர்வை பாராட்டி வாழ்த்து
இலங்கை
மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் பழையமாணவனும் , மேனாள் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் , இன்னாள் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான கனகசபாபதி கனகேஸ்வரன் அவர்கள் , இலங்கை நிர்வாகசேவையின் அதிசிறப்புத்தரத்திற்க்கு பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார் .
எதிர்காலத்தில் அவர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராகவோ , மத்திய அமைச்சின் செயலாளராக வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் .
அவருடைய பதவி உயர்வை பாராட்டி வாழ்த்துவதோடு , அவருடைய பணி மேலும் சிறக்க , அவர் ஆசுவாசிக்கின்ற மருதடி சிவனின் பாதம் பணிகிறேன் .