• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கவிஞர்.கா.மு.ஷெரிப் ஆவார்

சினிமா

பாட்டும் நானே! பாவமும் நானே!" என்று சிவ பெருமான் பாடியதாக திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் பாடலை எழுதியவர் ஒரு இஸ்லாமியர்
கவிஞர்.கா.மு. ஷெரிப் ஆவார்.
கலைஞரை திருவாரூரிலிருந்து அழைத்து வந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்து விட்டவரும் இவர்தான்.தமிழ் திரையுலகில் குறைந்த பாடல்களே எழுதினாலும் சிறப்பாக இருப்பவையாகும். 
கீழே அவர் பற்றி இரண்டு செய்திகள்.
எப்பேர்பட்ட மாமனிதர்கள் வாழ்ந்திருக் கின்றனர் நம் தாய் தமிழ்நாட்டில் !

 கா.மு.ஷெரீப் ...
இந்தக் கவிஞரின் பெயரை , நம்மில் ஒரு சிலர் மட்டுமே கேள்விப்பட்டிருப்போம் ..!
ஆனால் , அவர் எழுதிய ஒரு திரைப் பட பாடலை, 
நம்மில் பலரும் கேட்டு மகிழ்ந்திருப்போம் ..!
அந்தப் பாடல் :
“ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே …!”
.
ஆம்...
இப்படி ஒரு சில தேர்ந்தெடுத்த திரைப்பட பாடல்களை மட்டுமே எழுதி இருக்கிறார் கா.மு.ஷெரீப் !
.
சுமார் இருபது வருடங்களுக்கு முன் மறைந்து விட்ட கா.மு.ஷெரீப் குறித்து , சில இனிய நினைவுகளை , சமீபத்தில் தற்செயலாக படிக்க நேர்ந்தது .
.
சொன்னவர் சன் டி.வி. #வீரபாண்டியன் !
இதோ , வீரபாண்டியன் சொன்ன சில விஷயங்கள் :
.
“இளமையின் கோளாறால், வழி தவறி போய் கருவுற்று கலங்கினாள் மணமாகாத ஓர் #இந்து பெண் . காதலன் கைவிட்டு விட்டான்.
.
பெண்ணின் தகப்பனார் கவி கா.மு.ஷெரீப்பின் நேசத்துக்குரிய நண்பர் . 
இவரிடம் வந்து சொல்லி நொந்தழுதார். 
"குடும்ப மானம் கப்பலேறிவிடும்!" என்று குமைந்தார்.
.
" வேறு வழியில்லை. கருவை கலைக்க மருத்துவச்சி உதவியை நாட இருக்கிறேன் ” என்று கதறினார்.
.
ஷெரிப் என்ன சொன்னார் தெரியுமா ?
"உண்டான உயிரை அழிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. கருவை கலைப்பதை எங்கள் மார்க்கம் ஏற்றுக்கொள்ள வில்லை. 
ஆனால், உருவான அந்தக் கருவை காக்கும் பொறுப்பை கடவுள் கடமையாக்கியிருக்கிறான். அதை நான் ஏற்றுக்கொள் கிறேன்" 
என்று சொல்லி , தன் மனைவியையும் கருவுற்ற அந்தப் பெண்ணையும் லெட்சுமாங்குடிக்கு பக்கத்திலுள்ள வேலுக்குடி என்னும் தன் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தார்.
.
குழந்தை பிறந்ததும் , அந்த பெண்ணை சத்தமின்றி அவளுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். 
பிறந்த அந்த குழந்தையை தன் மனைவி ஈன்ற மகவாக கூறி , வளர்த்து ஆளாக்கினார். 
.
அப்போது, "இந்த வயதிலும் உனக்குக் குழந்தை தேவையா?' என ஏகடியம் பேசியவர்களின் வசையையும் மௌனமாக ஏற்றுக்கொண்டார்.”
 நெகிழ்ந்து போனேன்
வீரபாண்டியன் சொன்னதை படித்து விட்டு !
இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவராக இருந்தபோதும் , 
பிற சமயத்தாரையும் மதித்து போற்றக்கூடிய பக்குவமான அன்பு இதயம் கொண்டவராக , 
அன்னை மனம் கொண்டவராக இருந்திருக்கிறார் கா.மு. ஷெரிப்.
"அன்னையை போலொரு தெய்வ மில்லை அவள் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை”
.

இதுவும் கா. மு. ஷெரிப் எழுதிய பாடல்தான் ..!
.
அந்தப் பாடலில்  கா. மு. ஷெரிப் எழுதியிருப்பார் :
“துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே – நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்”
.
இந்த வார்த்தைகள் அன்னைக்கு மட்டும் அல்ல..!
மதம் தாண்டி மனித நேயம் கொண்ட கா. மு. ஷெரிப் போன்ற அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் பொருந்தும் !
 "பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே" 
இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.
 "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?" – இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.
 "ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?"
 "ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே" ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தில், யார் எழுதியது என்று ‘குவிஸ்’ நடத்தாமல் ரசிக்கிறோம்.
 இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்து விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.
.
வாழ்க
 கா.மு.ஷெரிப் புகழ் ..!
வளர்க மனித நேயம்.!

 

Thilak Ganesan

Leave a Reply