• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடக்கு மார்க்கத்திலான ரயில் நேர அட்டவணையில் மாற்றம்

இலங்கை

வடக்கு மார்க்கத்திலான ரயில் நேர அட்டவணையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிற்பகல் 1.40 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் கல்கிஸ்சை வரை பயணித்த யாழ்தேவி ரயில்; இன்று முதல் காலை 10 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்று அதிகாலை 5.20 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை பயணித்த ரயிலின் நேரம் காலை 5.30 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொல்கஹவெலயில் இருந்து மஹவ சந்தி வரை காலை 5.30 க்கு செல்லும் தினசரி ரயிலின் நேரம் காலை 5.25 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக குருணாகலில் இருந்து காலை 8.55 க்கு மஹவ சந்தி வரை செல்லும் தினசரி ரயிலின் நேரம் காலை 9.15 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply