• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேல், உக்ரைனுக்கு உதவுவது அமெரிக்க பாதுகாப்புக்கு இன்றியமையாதது- ஜோ பைடன்

ரஷியா- உக்ரைன் இடையிலான போரில் உக்ரைனுக்கும், இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரில் இஸ்ரேலுக்கும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. இஸ்ரேல் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போரை நிறுத்துவதற்கு வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இஸ்ரேலுக்கு துணை நிற்போம் எனத் தெரிவித்திருந்தார்.

தற்போது, உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு உதவுவது அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க தலைமை உலகத்தை ஒன்றிணைத்து வைத்துள்ளது. இரண்டு முற்றிலும் மாறுபட்ட, கணிக்க முடியாத, ரத்தக்களரி போர்களுக்கு மத்தியில் உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு உதவுவது, அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது.

பயங்கரவாதிகள் அவர்களுடைய தாக்குதலுக்கு விலை கொடுக்காதபோது, சர்வாதிகாரிகள், அவர்களுடைய ஆக்கிரமிப்புகளுக்கு விலை கொடுக்காத போது, அவர்கள் மேலும் குழப்பத்தையும், உயிரிழப்புகளையும், இன்னும் அதிகமான அழிவுகளையும் ஏற்படுத்துவார்கள் என்பதை வரலாறு நமக்கு கற்றுத்தந்துள்ளது.

அவர்கள் தொடர்ந்து செல்கிறார்கள். அதன் விளைவு மற்றும் அச்சுறுத்தல் அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிகரித்து கொண்டிருக்கிறது'' என்றார்.

மேலும், பாராளுமன்றத்தில் 105 பில்லியன் அமெரிக்க டாலர் கேட்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அதில் 14 பில்லியன் டாலர் இஸ்ரேலுக்கும், 10 பில்லியன் குறிப்பிடப்படாத மனிதாபிமான உதவிக்கும், 14 பில்லியன் அமெரிக்கா- மெக்சிகோ எல்லையை நிர்வகிக்கவும், 60 பில்லியன் டாலர் அளவில் உக்ரைனுக்கு முன்னதாக வழங்கிய ஆயுதங்களை மீண்டும் நிரப்பவும், 7 பில்லியன் டாலர் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கும் பயன்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply