சீன ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி ரணிலுக்கும் இடையே விசேட சந்திப்பு
இலங்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்கை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சீனாவில் பீஜிங் நகரித்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 16ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் சீனாவிற்கான நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் சீனாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.