• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹர்த்தாலால் முடங்கிய கிளிநொச்சி மாவட்டம்

இலங்கை

ஹர்த்தால் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்த நடவடிக்கைகள் முடங்கியுள்ளது. குறுந்தூர சேவைகளில் மாத்திரம் தனியார் பேருந்துகள் ஈடுபட்டுள்ளன.

அரச பேருந்துகள், ஏனைய அரச திணைக்களங்களின் சேவைகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றது.

முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டுள்ளன. மருந்தகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறுவதோடு சேவைச் சந்தை முழுமையாக முடங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
 

Leave a Reply