• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பேருந்து விபத்தில் 15 பேர் காயம்

இலங்கை

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இடம்பெற்ற இவ்விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில்  இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மரதன்கடவல பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply