• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய வம்சாவளி மக்களின் அடையாளத்தை அழிப்பதா ? ஜீவன் கண்டனம்

இலங்கை

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, இலங்கை தமிழர் என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயல் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

எனவே, பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பிறப்பு சான்றிதழ் உட்பட திணைக்களத்துக்குரிய ஆவணங்களில் இனத்தைக் குறிப்பிடும் சொற்பதம் குறித்த சுற்றுநிருபம் தொடர்பில் அமைச்சர் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

இது சம்பந்தாக ஜனாதிபதி மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply