• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாடொன்றில் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான பிரித்தானிய தம்பதி

உகாண்டாவில் தேனிலவுக்கு சென்ற பிரித்தானிய தம்பதியினர் பரிதாபமாக படுகொலை செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. டேவிட் மற்றும் செலியா பார்லோ தமபதி தங்கள் திருமணத்தை கொண்டாடுவதற்காக கிழக்கு ஆப்பிரிக்க நாட்டிற்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில் ஐ.எஸ் ஆதரவு பயங்கரவாதக் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
  
இதன் பின்னர் அவர்களது வாகனத்தையும் அந்த குழு தீ வைத்து எரித்துள்ளனர். இவர்களுடன் சென்ற 40 வயதான வழிகாட்டியும் துப்பாக்கி குண்டுக்கு பலியானதாக உகாண்டா பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகளால் ராணி எலிசபெத் தேசிய பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட பின்னர், அவர்களின் எரிக்கப்பட்ட சஃபாரி வாகனத்தின் பதறவைக்கும் படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

உகாண்டா பொலிஸ் தரப்பு தெரிவிக்கையில், தாக்குதல் சம்பவமானது அக்டோபர் 17 அன்று மாலை 6 மணியளவில் கட்வே-கபதூரோ முர்ரம் சாலையில் நடந்துள்ளது.

ராணி எலிசபெத் தேசிய பூங்காவில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு உகாண்டா நாட்டவர் மீது கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவயிடத்திலேயே மூவரும் கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்களின் வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 

Leave a Reply