• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சமர்ப்பிக்கப்போவதில்லை – சபாநாயகர்

இலங்கை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடமபெற்றுவரும் நாடாளுமன்ற அமர்விலேயே மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இந்த சட்டமூலம் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், அது முன்வைக்கப்படாது என மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை எதிர்த்து 45 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

Leave a Reply