கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார்
சினிமா
சினிமாவில் வாங்கிய முதல் சம்பளம் 5 ஆயிரம் ரூபாய். ஆனால் படம் முடிந்ததும் அவரை ஏமாற்றி ரூ.3 ஆயிரம் மட்டும் தான் அவர்கள் கொடுத்தார்கள்.
3 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்தார்.
1990-களில், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகியோருக்குப் பிறகு, இந்தியாவில் அதிக சம்பளம் பெற்ற இவர்
ஹீரோக்கள் மட்டுமே போலீஸ் உடை அணிந்து கொண்டு பறந்து பறந்து சண்டை காட்சிகளில் நடித்த காலத்தில் விஜயசாந்தி போலீஸ் வேடத்தில் கலக்கினார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.
விஜயசாந்திக்கு தனது வாழ்நாளில் பலமுறை செத்துப்பிழைத்ததாக தெரிவித்திருக்கிறார். ஒருமுறை விமான விபத்து மற்றொரு முறை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டேன்.
இன்னும் ஒரு முறை தீயில் மாட்டிக் கொண்டேன். இத்தனை அசம்பாவிதம் நடந்தாலும் நான் உயிர் பிழைத்தேன் தற்போது வரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
அதிரடி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவர் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டார்
இவர் இந்திய தேசிய திரைப்பட விருதை வென்றார். சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதை 5 முறையும் ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை 4 முறையும் பெற்றுள்ளார்.