• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாடு அனுப்புவதாக 80 இலட்சம் ரூபாய் மோசடி! யாழில் ஒருவர் கைது

இலங்கை

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ்பாணத்தைச் சேர்ந்த நபரைப் பொலிஸார் நேற்றைய தினம்(16) கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு அம்பாறை பகுதியைச்  சேர்ந்த  குறித்த இளைஞனை மேசடி செய்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டினையடுத்து, குறித்த நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply