• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உயிரிழந்த செய்தியாளரின் உடல் நல்லடக்கம்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (வெள்ளிக் கிழமை) தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் தனியார் செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் கொல்லப்பட்டார்.

போர் பற்றிய செய்தி சேகரிக்க சர்வதேச செய்தியாளர்கள் அடங்கிய குழு நேற்று மாலை தெற்கு லெபனான் அருகே உள்ள ஆல்மா அல் சஹாப் என்ற கிராமத்தில் ஒன்று கூடியது. அப்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தனியார் செய்தி நிறுவன ஒளிப்பதிவாளர் இசாம் அப்தல்லா உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து போரில் உயிரிழந்த செய்தியாளர் இசாமின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக இவரது உடலுக்கு செய்தியாளர்கள், லெபனான் பாராளுமன்ற உறுப்பினர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பிறகு இவரின் உடல் லெபனானின் தெற்கில் உள்ள கியாம் கிராமத்தின் வழியே உள்ளூர் இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வெள்ளி கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஊடக சுதந்திரத்திற்கு எதிரானது என்று லெபனான் வெளியுறவுத் துறை அமைச்சகம் குற்றம்சாட்டியதோடு, ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக புகார் அளித்தது.

Leave a Reply