• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா

சினிமா

நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் பகிர்ந்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்றைக்கு வரைக்கும் உச்ச நடிகையாக இருந்து வருகிறார்.
  
சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட இவர் தெலுங்கில் முன்னணி நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

நல்ல ஜோடிகளாக வலம் வந்த இருவரும் 2021ஆம் ஆண்டு சில காரணங்களால் தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர். இவர் விவாகரத்துக்கு பின்னர் பல திரைப்படங்களில் பிஸியாக தற்போது நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா முன்னதாக மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோயால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சைகளை அமெரிக்கா வரை எடுத்து வந்தார். மேலும், சிகிச்சை முடிந்து மீண்டும் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் மறுபடியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிரும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.

மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சிகிச்சையை மேற்கொண்டு வருவதாகவும் இதன் மூலம் இரத்த அணுக்கள் உற்பத்தி அதிகரிப்பு, தசை வலிமை, வைரஸ்களை எதிர்த்துப் போராடும் திறன், எலும்புகளுக்கு வலிமை பெறவும் இந்த சிகிச்சை உதவுவதாக அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். 

Leave a Reply