• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் எடுக்கப்பட்டுள்ள விசித்திர தீர்மானம்

கனடா

கனடாவில் கியூபெக் மாகாணத்தில் பிரெஞ்சு மொழியை பாதுகாக்கும் நோக்கில் ஆங்கில மொழி மூலம் வகுப்பு கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  
பல்கலைக்கழகங்களில் ஆங்கில மொழி மூலம் கற்கும் மாணவ மாணவியருக்கான கல்வி கட்டணங்கள் உயர்த்தப்படும் என மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அரசாங்கத்தினால் வெளியிடப்பட உள்ளது.

மாகாணத்தில் பிரெஞ்சு மொழி பயன்பாடு குறைவடைந்து செல்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனவே கியூபெக் மாகாணத்தின் ஆங்கில மொழி மூலம் கற்பித்தல்களை மேற்கொள்ளும் பல்கலைக்கழகங்களில் பயிலும் சர்வதேச மற்றும் கியூபெக் மாகாணம் தவிர்ந்த மாணவ மாணவியர்களிடம் கூடுதல் தொகை வகுப்பு கட்டணம் அறவீடு செய்யப்பட உள்ளது.

பிரெஞ்சு மொழியை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. 
 

Leave a Reply